இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு அடுத்தாண்டு
ஆன்லைன் கவுன்சிலிங்க நடத்தபடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது . பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடக்குமிடம் சென்னை அண்ணா பல்கலைகழகம் ஆகும். இதுவரை தமிழ்நாட்டில் அனைத்து பொறியியல் பயிலும் மாணவர்கள் அனைவரும் சென்னையில் வந்து தங்கி தங்களுக்கான கல்லுரியை பொறியியல் பாடத்திற்க்காக தேர்ந்தெடுத்தனர். மாணவர்களுக்காக அரசு பேருந்துவசதிகள் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும்.
அடுத்தாண்டு முதல் இணையம் வாயிலாக பொறியியல் மாணவர்கள் தங்கள் கல்லுரியை தேர்ந்தெடுக்க அரசு வாய்ப்பளித்துள்ளது . இது மாணவர்கள் பெற்றோர்கள் அலைச்சலை தடுக்கும் . பொறியியல் கவுன்சிலிங் 1995 முதல் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வந்தது பின் சென்னையில் மட்டுமே நடக்கிறது. 2018 முதல் ஆன்லைன் கவுன்சிலிங் நடக்கும் . அக்ரி மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு செல்லும் மாணவர்கள் காலியிடம் அறிவிக்கபட்டு கட்ஆஃப் தெரிவிக்கப்படும் இதன் மூலம் பொறியியல் படிப்பில் சேர்க்கை அதிகரிக்கும் .
பொறியியல் படிக்கும் மாணவர்கள் காலியிடம் நிரப்ப இதுவுமொரு யுக்தியாகும் . கவுன்சிலிங் நடத்தவும் அந்தந்த பகுதிகளை நிர்ணயிக்கவும் அதுகுறித்து அனுமதி பெறும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. மேலும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் .
சார்ந்த தகவல்கள்:
மருத்துவம் , வேளாண்மை, பொறியியல் கவுன்சிலிங்கள் நீட் தேர்வுக்குப்பின் ஸ்தம்பிப்புஇன்ஜினியரிங்
இன்ஜினியரிங் கல்வி கட்டணம் உயரும் வாய்ப்புள்ளது .கல்லுரிகளின் தரவரிசை விரைவில் வெளியிடப்படும்