சென்னை: ஆன்-லைன் படிப்புகளால் இந்திய மாணவர்கள் அதிகம் பேர் பயன்பெறுகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஆன்-லைன் படிப்புகள் அதிக அளவில் பிரபலமாகி வருகின்றன. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் இந்தபடிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு அதிக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த ஆன்-லைன் படிப்புகளால் அதிகம் பயன்பெறுவது இந்திய மாணவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் இதுதொடர்பான ஆய்வை பென்சில்வேனியா, வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்தினர்.
இதுசம்பந்தமாக 51,954 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் அதிக அளவில் ஆன்-லைன் படிப்புகளை படிப்பது இந்திய மாணவர்கள் என்றும் உலக அளவில் ஆன்-லைன் படிப்புகளை சிறப்பாக பயில்வதும் இந்திய மாணவர்களே என்றும் தெரியவந்துள்ளது.
82 சதவீத இந்திய மாணவர்கள் சிறப்பான முறையில் ஆன்-லைன் கல்வியைப் பயில்வது தெரியவந்துள்ளது. தங்களது வேலையை செம்மைப்படுத்திக் கொள்வதற்காகவும், கல்வியறிவை வளர்த்துக் கொள்ளவும் இந்தியர்கள் ஆன்-லைன் கல்வியைப் பயில்வதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.