சென்னை: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் (ஓ.என்.ஜி.சி) பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது
ஓ.என்.ஜி.சி-யில் தொழில்நுட்பப் பிரிவு, தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளில் 110 பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விண்ணப்பங்களை அக்டோபர் 20-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், அசிஸ்டெண்ட் ரிக்மேன், அசிஸ்டெண்ட் டெக்னீஷியன் என பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.
வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வயதுக்குள் இருக்கலாம். ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்புச் சலுகை உண்டு.
எழுத்துத் தேர்வு, உயர் தகுதித் தேர்வு, பார்வைச் சோதனை, கனரக வாகனங்கள் இயக்கும் சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பங்களை அக்டோபர் 20-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். எழுத்துத் தேர்வு டிசம்பர் 13-ம் தேதி நடைபெற வாய்ப்புகள் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு ஓ.என்.ஜி.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ongcindia.com-ல் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












