சென்னை: ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை பார்க்க அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அக்டோபர் 7-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
அக்கவுன்ட்ஸ் ஆபீஸர், இன்டர்நெல் ஆடிட்டர், எக்சிகியூட்டிவ் டிரெய்னி(மெக்கானிக்கல்), எக்சிகியூட்டிவ் டிரெய்னி(சிவில்), எக்சிகியூட்டிவ் டிரெய்னி(இன்பர்மேஷன் டெக்னாலஜி), எக்சிகியூட்டிவ் டிரெய்னி(ஹியூமன் ரிசோர்ஸ்), எக்சிகியூட்டிவ் டிரெய்னி(பப்ளிக் ரிலேஷன்ஸ்), எக்சிகியூட்டிவ் டிரெய்னி(ஜியாலஜி), எக்சிகியூட்டிவ் டிரெய்னி(ஆர் அண்ட் டி) என பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு வழியாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறையின் கீழ் இயங்கி வருகிறது ஆயில் இந்தியா நிறுவனம். அஸ்ஸாம் மாநிலம் துலியாஜானில் தலைமையிடத்தைக் கொண்டு ஆயில் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.