Scholarship for unemployed youth
படித்து விட்டு வேலையில்லா இளைஞர்கள் ஊக்கப்படுத்தும் விதமாக, வேலையில்லா இளைஞர்கள் உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் உதவித் தொகையை பெற, நவம்பர் 30ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம்
v ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
v அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
v மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது வரம்பு ஏதுமில்லை. அரசின் முதியோர் உதவித்தொகை (OAP) பெறுபவர்களாயின், அவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியில்லை.
v பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயிலுபவராக இருக்கக்கூடாது. இந்த்தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர்களுக்கு, தமிழக அரசால் வழங்கிவரும் உதவித்தொகை விவரம்:
ü பொதுப்பிரிவினர் (காலாண்டிற்கு ஒருமுறை)
ü பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை(SSLC-Failed) - ரூ.200/
ü பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு( SSLC-Passed) - ரூ.300/
ü பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(HSC-Passed)- ரூ.400/
ü பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(DEGREE-Passed) - ரூ.600/
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்
ü எழுதப்படிக்க தெரிந்த மற்றும் பத்தாம் வகுப்புதேர்ச்சி பெற்றவர்களுக்கு - ரூ.600/
ü பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(HSC-Passed) - ரூ.750/
ü பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(DEGREE-Passed) - ரூ.1000
(சிறப்பு நேர்வாக மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு மாதந் தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது)
ஆவணங்கள் என்னென்ன
மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி/கல்லூரி மாற்று சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்பித்திலோ அல்லது வேலைவாய்ப்பு துறை இணையதளத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்திலோ அல்லது ஜெராக்ஸ் நகல் எடுத்து விண்ணப்ப படிவத்திலோ பூர்த்தி செய்து, ஆர்ஐஆல் அல்லது உரிய அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட சான்றும், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தாங்கள் தொடர்ந்து உதவித்தொகை பெற வேலையில் இல்லை என்பதற்கான சுய உறுதிமொழி ஆவணத்தை நேரில் அளிக்க வேண்டும்.
மூன்று ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணம் அளிக்க தேவை இல்லை என,