மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது . அமெரிக்காவை சேர்ந்த ஜெஃப்ரி சி ஹால், மைகேல் ராஸ்பாஷ், மைகேல் டபிஸ்யூ யங், ஆகிய மூன்று அறிஞர்களுக்கான மரபியல் அறிஞர்களுக்கான நோபல் வழங்கப்பட்டுள்ளது .
மருத்துவத்துவம் சார்ந்த மனித நோய்களுக்கு இவர்கள் கண்டுப்பிடித்த உயிரி கண்டுபிடிப்பானது உதவிகரமாக மனிதர்கள் நோய்கள் குறித்து அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என மருத்துவ உலகம் நம்புகிறது .
மனிதர்கள் உட்பட உயிரினங்கள் உடலுக்குள் நேரத்திற்கேற்றவாறு மாற்றங்களை ஏற்படுத்தும் உயிரி கடிகாரகம் எவ்வாறு செயல்படுகிறது என்ற தங்கள் ஆய்வில் மூலம் கண்டறித்துள்ளனர் அதற்காகவே இவர்களுக்கு நோபல் பரிசு மூவர்க்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது .

தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் இவ்வாறு உயிர்கள் அனைத்தும் புவி சுழற்சிக்கேற்ற வகையில் தங்கள் உடலை தகவமைத்து கொள்கிறது . மேலும் பசி தூக்கம் உணர்வுகளுக்கு உயிரிகடிகாரம் நேரத்திற்கு உதவுகிறது என்பது தெரியும் . இவற்றின் குறைப்பாட்டல் மன அழுத்தம் மற்றும் மிகையுணர்வு மற்றும் மனநோய் ஏற்படுகின்றன . இவற்றின் குறைப்பாட்டால் உடல் பருமன் மற்றும் புற்றுநோய் உருவாகிறது .
உயிரி கடிகாரத்தின் இயக்கத்தை உருவாக்குவது எது என்ற குழப்பத்தை மூன்று
விஞ்ஞானிகளும் பலவண்டுகளின் இயக்கத்தை மாதிரியாக கொண்டு உயிரிகடிக்காரத்தை இயக்குவது குறித்து கண்டறிந்து சாதனை புரிந்துள்ளனர். உயிரி கடிகார இயக்கமானது இரவு நேரத்தில் புரதத்தை தனக்குள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் கிரகித்து பகல் நேரத்தில் வெளியிடுகின்றது . இத்தகைய கண்டுபிடிப்பு நேரம் தவறிய உடலியக்கத்தால் ஏற்படும் நோய்களை கண்டறிய உதவிகரமாக இருக்கும் என நோபல் குழு அறிவித்துள்ளது மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பரிசு தொகையை மூவர்க்கும் பகிந்தளிக்க நோபல் குழு முடிவு செய்துள்ளது.
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












