சென்னை: ஒரே நேரத்தில் இரட்டை டிகிரி பயிலும் முறைக்கு ஆதரவு இல்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அதிரடியாக அறிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கும் முறையை மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுதொடர்பாக ஆலோசித்ததில் அதற்கு பெரும்பான்மையான ஆதரவு கிட்டவில்லையென்றும், அந்தத் திட்டத்தை அனுமதிக்கும் திட்டம் இல்லை யுஜிசி அறிவித்துளள்ளது.

இதுகுறித்து யுஜிசி செயலர் ஜஸ்பால் எஸ். சாந்து கூறியதாவது: இரட்டைப் பட்டம் பயிலும் குறித்து குறித்து பல்வேறு கல்வி கவுன்சில்களிடம் கருத்து கேட்டோம். ஆனால் எந்த கவுன்சிலிடமிருந்தும் ஆதரவான பதில் வரவில்லை. எனவே பல்கலைக்கழகங்கள் முதலில் பட்டம், அதன்பிறகு மாஸ்டர் டிகிரி என்ற முறையையே கடைப்பிடிக்கவேண்டும். இதை ஏற்கெனவே 2003-ல் நாங்கள் அறிவித்துள்ளோம். அப்போது அறிவித்த விதிமுறைகள், நடைமுறைகளை மட்டுமே பல்கலைக்கழகங்கள் கடைப்பிடிக்கவேண்டும் என்றார் அவர்.
ஒரே நேரத்தில் இரட்டைப் பட்டம் பயில்வது குறித்து மாணவர்கள் வலியுறுத்தியபோது இதுதொடர்பாக நிபுணர் குழு ஒன்றை யுஜிசி அமைத்தது. ஆனால் இந்தத் திட்டத்துக்கு குழு ஆதரவு தரவில்லை. ரெகுலர் கல்லூரிகளில் பயிலும் மாணவர், தொலைநிலைக் கல்வித் திட்டத்திலோ அல்லது வேறு பல்கலைக்கழகத்திலோ பயிலலாம் என குழு பரிந்துரை செய்தது. தே நேரத்தில் ஒரே நேரத்தில் ஒரே பல்கலைக்கழகத்தில் இரட்டைப் பட்டம் பயில முடியாது என அது அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












