டெல்லி:ராய்ப்பூரிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (என்ஐடி) பிஎச்.டி. உயர்படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் படிப்புக்கு ஏப்ரல் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

முழு நேர படிப்பாகவோ, பகுதி நேர படிப்பாகவோ, ஸ்பான்ஸர் படிப்பாகவோ, சுய நிதி படிப்பாகவோ இந்தப் படிப்பை என்ஐடி-யில் பயிலலாம்.
அப்ளைட் ஜியாலஜி, பயோ மெடிக்கல், பயோ-டெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், கெமிஸ்ட்ரி, சிவில் என்ஜினீயரிங்க, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், ஹியூமானிட்டீஸ் அண்ட் சோஷியல் சயின்ஸஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பிஎச்.டி படிப்புகள் வழங்கப்படவுள்ளன.
2016-ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். இந்தப் படிப்பு பயில மாணவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்தினால் போதும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை "Director, NIT Raipur" என்ற பெயரில் டிடி எடுத்து "The Registrar, NIT Raipur, CG 492010" என் முகவரிக்கு அனுப்பவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு http://www.nitrr.ac.in என்ற இணையதள முகவரியைக் காணலாம்.
விண்ணப்பப் படிவத்தைப் பெற கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்
http://www.nitrr.ac.in/downloads/admission/admission2015/Ph.D/Ph.D.Advertisement 201501042015.pdf


Click it and Unblock the Notifications












