புதுடெல்லி: துர்காப்பூரில் அமைந்துள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (என்ஐடி) மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2016-ம் ஆண்டில் எம்சிஏ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாகும் இது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அகர்தலா, அலகாபாத், போபால், கோழிக்கோடு, துர்காப்பூர், ஜாம்ஷெட்பூர், குருஷேத்ரா, ராய்ப்பூர், சூரத்கல், திருச்சிராப்பள்ளி, வாரங்கல் ஆகிய நகரங்களில் உள்ள என்ஐடி-களில் எம்சிஏ படிப்பில் சேர முடியும்.
இதற்கான பதிவுகள் ஏப்ரல் 18-ம் தேதி தொடங்குகின்றன. என்ஐஎம்சிஇடி நுழைவுத் தேர்வு மே 28-ம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு http://www.nitdgp.ac.in என்ற இணையதளத்தில் தொடர்புகொள்ளலாம்.
இந்த படிப்பில் சேர விரும்புபவர்கள் பிஎஸ்சி, பிசிஏ, பிஐடி, பிஇ, பிடெக் படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு மதிப்பெண் சலுகை உண்டு.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,800 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.900 செலுத்தினால் போதுமானது. தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். 120 கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 18-ம் தேதி கடைசி நாளாகும். தேர்வுகள் மே 29-ம் தேதி நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் 6-ம் தேதி வெளியிடப்படும்.