சென்னை: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி(என்ஐஎஃப்டி) வழங்கும் படிப்புகளில் சேர பதிவு செய்வதற்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி கடைசி நாளாகும்.
சென்னை தரமணியில் இந்த புகழ்பெற்ற இன்ஸ்டிடியூட் அமைந்துள்ளது.
2016-17-ம் கல்வியாண்டில் பி.டெஸ், எம்.டெஸ் படிப்புகளை வழங்குகிறது என்ஐஎஃப்டி. இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்க பதிவு செய்ய ஜனவரி 10 கடைசி நாளாகும்.
அதைத் தொடர்ந்து 2-ம் கட்டத் தேர்வு நடைபெறும். இதையடுத்து 3-வது கட்டமாக குரூப் டிஸ்கஷனுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும்.
இந்த நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்ய கடைசி நாள் ஜனவரி 10 ஆகும். மேலும் ஆன்-லைன் நுழைவுத் தேர்வுக்கு அபராதத்துடன் கட்டணத்தைச் செலுத்த கடைசிநாள் ஜனவரி 16 ஆகும். நுழைவுக் கூடச் சீட்டுகள் ஜனவரி 21-ம் தேதி முதல் கிடைக்கும். இறுதி கட்டத் தேர்வு (குரூப் டிஸ்கஷன், நேர்முகத் தேர்வு) ஏப்ரல் முதல் மே வரை நடைபெறும்.
சேர்க்கைகள் ஜூன் மாதம் தொடங்கும் என என்ஐஎஃப்டி தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு http://www.nift.ac.in/chennai/index.html என்ற இணையதளத்தில் காணலாம்.