சென்னை: கல்வி உதவித்தொகையுடன் பிரிட்டனிலுள்ள நியூகேசில் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளது.
பிரிட்டன் நாட்டிலுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று நியூகேசில் பல்கலைக்கழகம். இங்கு ஏராளமான இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தி் உயர் கல்வி பயில, உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்திய மாணவர்களுக்காக சிறப்பு உதவித்தொகைகளையும் அந்த பல்கலைக்கழகம் வ ழங்கி வருகிறது.
மொத்தம் 5 உதவித்தொகைகள் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன. 2016-ம் ஆண்டில் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு இந்த பிரிட்டிஷ் கவுன்சில் கிரேட் காலர்ஷிப் வழங்கப்படவுள்ளது.
இந்த உதவித்தொகையைப் பெற விரும்புபவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். நியூகேசில் பல்கலைக்கழகத்தில் அவர்கள் பட்டமேல்படிப்பு(பி.ஜி டிகிரி) படிப்பவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் 2016-17-ம் ஆண்டில் படிப்பில் சேர்ந்திருக்கவேண்டும். மேலும் பட்டப் படிப்பின்போது அவர்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
விருப்பம் உள்ளவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணபப்பங்களை அனுப்ப கடைசி தேதி அடுத்த ஆண்டு ஜூன் 30 ஆகும்.
ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்ய https://app.geckoform.com/public/#/form/A8zCMVfK என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.