பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுதேர்வு எழுத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன!!

தமிழ்நாடு தேர்வுத்துறை பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது

By Sobana

பிளஸ் ஒன் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளது . இந்தாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பால் பிளஸ்2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுதேர்வு குறித்து சில கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளது

பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுதேர்வு உள்ளதால் கட்டுப்பாடுகளுக்குள் மாற்றப்பட்டுள்ளார்கள் . மதிபெண் முறையும் மாற்றப்பட்டுள்ளது . அடுத்தாண்டு முதல் புதிய பாடங்கள் வருவதால் பிளஸ் 2 மாணவர்களுக்கும் கட்டுப்பாடுகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகுறித்து தேர்வுத்துறை தெரிவித்துள்ள கருத்துகளுக்கு , கல்வித்துறை அனுமதியளித்து ஏற்றுள்ளது. இதன்படி வரும் மார்ச் தேர்வில் பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் அக்டோபர் மாதம் தேர்வில் பங்கேற்க முடியும், அல்லது 2019 வருடம் தேர்வில் பங்கேற்கலாம் . அதற்கு பின் தேர்ச்சி பெறாவிட்டால் தேர்வு எழுத முடியாது எனவே 2019க்குள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் .

பத்தாம் வகுப்பு பூர்த்தி செய்த தனிதேர்வாளர்கள் இரண்டு வருடங்கள் முடிந்திருப்பின் இவ்வாண்டு அக்டோபரில் தனி தேர்வு எழுதலாம். 2016இல் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் 2018 வரை பிளஸ் 2 தேர்வை 1200 மதிபெண் முறையில் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது . ஆதலால் தனிதேர்வு எழுதுவோர் 2018க்குள் தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.

தேர்வுத்துறையின் அறிவிப்பானது தனிதேர்வு எழுதுவோர்க்கு தேர்வின் தகவல்கள் தனித்தேர்வு எழுதுவோர்க்கு தேர்ச்சி பெறும் வேகத்தை அதிகரிக்க செய்யும் . இத்தனை மாற்றங்களும் பாடத்திட்டங்கள் மாற்ற பெறுவதால் ஏற்ப்பட்டுள்ளது . புதிய பாடத்திட்டங்கள் தரமானதாகவும் , நீட் போன்ற மத்திய அரசு நடத்தும் தேர்வை எதிர்கொள்ளும் விதமாக இருக்குமென்பதால் மாணவர்களின் தேர்வு கண்ணோட்டமும் மாறுபடும் அத்துடன் தேர்வை அணுகும் போக்கிலும் மாற்றம் இருக்கும் .

வரும் கல்வியாண்டின் பொது தேர்வு 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அணுகும் முறை முற்றிலும் வேறுபடும் . மூன்று வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுகள் ஒன்றுபோல் அறிவித்து தேர்வுத்துறை மாணவர்களை ஒரே சீராக தேர்வுக்கு தயார் செய்கிறது என்பதால் தேர்வுத்துறைக்கும் மூன்று பொதுதேர்வுகள் நடத்தும் முறைகள் புது அனுபவமாக இருக்கும் என கருதபடுகிறது .

சார்ந்த பதிவுகள்:

பள்ளிகல்வித்துறைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கல்வி செயலர் பிரதீப் யாதவ்பள்ளிகல்வித்துறைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கல்வி செயலர் பிரதீப் யாதவ்

பள்ளி மாணவர்களுக்கு ஒன்றியம் முதல் மாநிலம் வரை நுண்கலை போட்டிகள் !! பள்ளி மாணவர்களுக்கு ஒன்றியம் முதல் மாநிலம் வரை நுண்கலை போட்டிகள் !!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
above article tell about rules for state board students
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X