மத்திய அரசின் போட்டி தேர்வுகளை தமிழக மாணவர்களை திறம்பட எதிர்கொள்ள பயிற்சி அளிக்கும் வகையில் தமிழம் முழுவதும் அமைக்கப்பட்டு வரும் 442 மையங்களில் செப்டம்பர் மாதமே பயிற்சிகள் தொடங்கபடும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார் .
சென்னை பல்கலைகழகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற மலேசியாவில் தமிழ்கல்வி - 200 ஆண்டு விழா கருத்தரங்கு நடைபெற்றது . மலேசியா கருத்தரங்கில் கலந்து பேசிய கல்வி அமைச்சர் தெரிவித்ததாவது , மத்திய அரசின் பல்வேறு போட்டி தேர்வுகளை தமிழக மாணவர்களை திறம்பட எதிர்கொள்ள வைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது . இதற்காக 442 மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன . மேலும் மாணவர்களின் வேலைவாய்ப்பை பெறும் வகையில் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை தரமானதாக்க உருவாக்க திட்டமிட்டுள்ளனர் .

மத்திய அரசின் எந்த ஒரு தேர்வையும் திறம்பட எதிர்கொள்ள மாணவர்களுக்கு சிறப்பாக செயல்பட பாடத்திட்டங்களை சிறப்பாக உருவாக்கி வருகிறது . இன்னும் சிறப்பான வேலைவாய்ப்பு திட்ட நடவடிக்கைகளை உருவாக்கி இந்த மாத இறுதிகுள் அறிவிக்கவுள்ளது.
மாணவர்களுக்கான சிறப்பான நடவடிக்கைகளை மேம்படுத்தி உருவாக்கித் தரவேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு திட்டமிட்டுள்ளது . போட்டி தேர்வின் கடினத்தன்மையை போட்டி தேர்வர்கள் எளிதில் எதிர்கொள்ளும் அளவிற்கு அரசு திட்டமிட்டுள்ளது . போட்டி தேர்வுகளையும் மத்திய அரசின் எந்த நுழைவு தேர்வையும் திறம்பட தெரிவித்துள்ளது .
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












