அரசு பள்ளிகளில் கால அட்டவணையில் குழறுபடிகள் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அட்டவணை முறை கிடப்பில் போடப்பட்டுள்ளன . நிகழாண்டு முதல் நடைமுறை படுத்தப்பட்டு வந்த கையேடுகள் பின்ப்பற்றப்படாமல் கைவிடப்பட்டுள்ளது .

தமிழகத்தில் பழைய காலஅட்டவணை முறை மாற்றப்பட்டு புதிய காலஅட்டவணை முறை அறிமுகப்படுத்தப்படுப்பட்டு முன்னோட்டம் பார்க்க தமிழக கல்வித்துறை திட்டமிட்டது . அதன்படி மாணவர்களுக்கு புதிய காலஅட்டவணை அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்தில் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் .
மாநிலத்தில் முன்னோட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டு அமல்ப்படுத்தப்பட்ட திட்டம் அடுத்தாண்டு முதல் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சிக்கல்கள் எழுந்துள்ளன .
சார்ந்த பதிவுகள்:
புதிய கால அட்டவணைப்படி 9.10 முதல் 9.20 இறை வணக்கம் ,
9.20. 10.50 தியானம் நாள்தோறும் ஒரு பாடத்தில் குருந்தேர்வு , 10.50 முதல் 11 இடைவேளை 11 - 12 பாடவேளை, 12-12.20 எளிய பாடப்பயிற்சி ,
12.20- 1 மதிய உணவு இடைவேளை
1-2 மணி வரை சொல்வதை எழுதுதல் செய்திதாள் வாசித்தல் 2- 2.40 பாடம் நடத்துதல் ,2.40 முதல் 2.50 இடைவேளை , 2-50 முதல் 3.30 - 4.10 உலக தரம் வாயந்த திரைப்படம் காணபித்தல் , வினாடி வினா, செயல்முறை பயிற்சி, அறிவியல் , மன்ற செயல்பாடுகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது . மேலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 20 நிமிடம் தாமதமாக தொடங்கி 20 நிமிடம் நேரம் எடுத்து முடித்து கொள்ளலாம் .
படித்தல் ,பேசுதல், வினவுதல் , அறிதல் , கேட்டல், போன்ற பல்வேறு திறன்களை வெளிப்படுத்துதல் . கற்றலின் பல்வேறு நிலைகளை அடைதல் பெற்றோர் ஆசிரியர்கள் சந்தித்தல் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை என பல திட்டங்களை கொண்டிருந்தது .
ஆனால் மாணவர்கள் உணவு உண்ண காலதாமதப்படுத்துவதால் ஆசிரியர்கள் மாணவர்கள் உண்டபின் சென்று சாப்பிட தாமதமாகிறது என்று ஆசிரியர்கள் அதனை எதிர்த்து அத்திட்டங்களை பின்ப்பற்ற மறுப்பு தெரிவித்துள்ளனர் .
அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் அத்துடன் ஆசிரியர் சங்கங்கள் இதனை எதிர்த்து போராடுகின்றனர் . இதனையடுத்து புதிய கல்வித்திட்டங்களான கல்விமுறைக்கு அரசு என்ன மாற்றங்களை கொண்டுவரும் என எதிர்ப்பார்பில் ஆசிரியர்கள் உள்ளனர்.
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












