நீட் தேர்வு முடிவு ஜூன் 26 ல் வெளியாகுமென தகவல் தேர்வு முடிவை எதிர்நோக்கும் மாணவர்கள்,
நீட் தேர்வு எழுதியோர் தேர்வு முடிவு நேற்று வருகிறது இன்று வருகிறது நாளை வருமா என்று பெற்றோரும மாணவரும் நீட் தேர்வுக்காக காத்திருக்கும் வேளையில் நீட் தேர்வு முடிவானது மிகுந்த எதிர்பார்புகளுக்கிடையில் ஜூன் 26 ல் வெளியிடுவதாக தகவல் கிடைத்துள்ளது .
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர்க்கைக்கு அனைந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வினை தமிழ்நாடு எழுத வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .இதையடுத்து தமழகம் நீட் தேர்வில் விலக்கு கேட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருந்தது . ஆனால் நீட் இந்தாண்டு நீட் தேர்வு நடத்தப்பட்டது , நீட் தேர்வுக்கான கேள்விகள் அனைந்திய அளவில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் .அவ்வாறு இல்லையெனில் தேர்வு முடிவு வெளியிட தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது , இதனையடுத்து கிளை நீதி மன்றமும் தடை விதித்தது ஆனால் உச்ச நீதி மன்றம் அத்தடையை தகர்த்தி நீட் தேர்வு முடிவை வெளியிட ஆணை பிறப்பித்தது . இந்நிலையில் தமிழக அரசு மருத்துவ தரவரிசை மற்றும் கவுன்சிலிங்கை எப்போது நடத்தும் என மெடிக்கல் கவுன்சில் விசாரித்தது . தமிழக அரசின் அறிவுரைக்காக காத்திருக்கிறோம் என்றனர் மருத்துவ அதிகாரிகள் .
நீட் தேர்வு முடிவு வெளிவரும் முன் பொறியியல் கல்லுரிகள் தரவரிசை வெளியிடப்பட்டன . மருத்துவ கவுன்சிலிங் விண்ணப்பங்களும் தயாரகிவிட்டன . கால்நடை மருத்துவ கவுன்சில் தேதியும் வெளிவந்துவிட்டது . ஆகையால் ஜூன் 26ல் நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட வேண்டும் அதனையோட்டியே அனைத்து கவுன்சிலிங்குகள் நடத்த ஏதுவாக இருக்குமென்பது அனைவரின் விருப்பமாகும் .
இது சார்ந்த தகவல்கள் :
நாளை முதல் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் வெளியிடப்படுகிறது .
கால்நடை மருத்துவபடிப்பிற்கு முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 19ல் தொடங்குகிறது...!
பல்மருத்துவபட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு...!