ஜனவரி 7 ஆம் தேதி மருத்துவ மேல்ப்படிப்புக்கான நீட்தேர்வு அறிவிப்பு . மாணவர்கள் விண்ணப்பிக்க தொடங்கலாம் .
நாடுமுழுவதும் மருத்துவ மேல்ப்படிப்புக்கான நீட்தேர்வு ஜனவரி 7 ஆம் தேதி தொடங்குவதாகும் . மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவானது ஜனவரி 31 ஆம் நாள் வெளியிடப்படும் என தேசிய தேர்வாணையம் அறிவித்துள்ளது .
தேசிய தேர்வுவாரியம் நடத்தவுள்ள 2018-2019 ஆம் ஆண்டு எம்.டி, எம்.எஸ், முதுநிலை படிப்புகளுக்கான டிப்ளமோ மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு அறிவிப்பின் வெளியீட்டின் சிறப்பம்சமானது நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரே கேள்வித்தாளில் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது .
நாடு முழுவதும் நடைபெறும் தேர்வில் சரியான ஒவ்வொரு விடைக்கும் 4 மதிபெண்கள் வழங்கப்படும் அத்துடன் தவறான விடைக்கு ஒரு மதிபெண் குறைக்கப்படும் . மேலும் விடையெழுதாத கேள்விக்கு மதிபெண் எதுவும் வழங்கப்படாது .
தேர்வுக்கு விண்ணப்பிக்க தொடர்ந்து விண்ணப்பிக்க இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் . இணைய தளத்தில் விண்ணப்பிக்க மாணவர்கள் தேர்வில் பங்கேற்க ஆதார் எண் அவசியம் வைத்திருக்க வேண்டும் . ஆதார் எண்கள் இல்லாதவர்கள் விண்ணப்பித்து பெற்றுகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
தேர்வுக்கான அறிவிக்கை மற்றும் இன்னும் பலவிவரங்கள் தேர்வு ஆணையத்தால் கூடியவிரைவில் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது . கேரியர் இந்தியா தேர்வு எழுதுவோர்க்கு மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ இணைப்பை அறிவித்துள்ளது .
நீட்தேர்வு என்றால் எல்லார்க்கும் சாக் அடிக்கும் என நினைக்கிறேன் காரணம் தமிழகத்தின் இந்த ஆண்டு நீட் தேர்வு குறித்த விமர்சனத்தில் தேர்வுத்தாள் மற்றும் தேர்வு குறித்து சிக்கல் இருந்ததனை மனதில் வைத்து தேசிய தேர்வு வாரியம் நாடு முழுவதும் ஒரே நாளில் நடத்தவும் தேர்வுத்தாள் ஒன்றாக இருக்குமென அறிவித்துள்ளது. இதன் மூலமாக அடுத்த வருடம் நடக்கும் மருத்துவ இளங்கலை நீட் தேர்வு இன்னும் சிக்கலற்ற ஒன்றாக விமர்சனங்களை சந்திக்காமல் நேர்த்தியான ஒன்றாக இருக்கலாம் என நம்பபடுகிறது
சார்ந்த பதிவு :
நீட் தேர்வு விடைத்தாள் வெளியீடு.. விடைத்தாளில் ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம் சிபிஎஸ்இ அறிவிப்பு.!
நீட் தேர்வு குறித்து மனஉலைச்சலுக்கு ஆளான மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கு கோர்ட் உத்தரவு