கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், முதுநிலை நீட் தேர்வு தேதி ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்துள்ளார்.
எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி, நடப்பு ஆண்டிற்கான தேதி வரும் ஏப்ரல் 18ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சமீப வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இளம் மருத்துவ மாணவர்களின் நலன் கருதி ஏப்ரல் 18ம் தேதியன்று நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.