பள்ளி மாணவர்களுக்கான அறையாண்டு தேர்வு நெருங்கி கொண்டு வருகின்றது . அறையாண்டு தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் படிப்பு மும்முமாகி கொண்டிருக்கின்றது .

தமிழக பள்ளிகளில் அறையாண்டு தேர்வுக்கு படிக்க மாணவர்கள் தயராகி கொண்டிருக்கின்றனர். போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் வகுப்பு டெஸ்ட்கள் மூலம் தேர்வுக்கு ரிவைஸிங் செய்து வருகின்றனர் .
பத்து மற்றும் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்களுக்கு பொது தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்படுள்ள நிலையில் அறையாண்டு தேர்வு வரை பிளஸ் மாணவர்களுக்கான மாதிரி வினா வங்கி இன்னும் வெளிவரவில்லை .
பிளஸ் ஒன் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்தவுடன் பிளஸ் ஒன் வகுப்புகள் சேர்ந்து உள்ளனர் . மாணவர்கள் இப்புதிய வகுப்புக்கு சேர்ந்துள்ள நிலையில் மாணவர்கள் அரையாண்டு தேர்வுக்கு தயாரகும் நிலையில் இன்னும் பொது தேர்வுக்கான வினா மாதிரி வெளியிடப்படவில்லை இது பிளஸ் ஒன் மாணவர்களுக்கு தேர்வு குறித்த குழப்பங்களை ஏற்ப்படுத்தியுள்ளது .
பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முதல் முறையாக நடைபெறுகிறது ஆகையால் அரசு மாணவர்களுக்கு வினா குறித்து வழிகாட்டும் என அறிவித்திருந்தது ஆனால் அந்த அறிவிப்புகளை அடுத்து இன்னும் மாதிரி வினா வெளியிடப்படவில்லை என்பது மாணவர்களுக்கு மிகுந்த சிக்கல்களை உண்டாக்கும் .
பொதுத்தேர்வுக்கான நாட்கள் நெருங்கும் வேளையில் இன்னும் அரசு மெத்தனமாக இருப்பது சரியன்று என பெற்றோர்கள் புலம்புகின்றனர். பொது தேர்வில் அதிக மதிபெண் பெறும் எண்ணத்துடன் படிக்கும் மாணவர்களுக்குள் அச்சம் நிலவுகின்றது . இதுகுறித்து அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
தமிழக அரசு அறையாண்டு தேர்விலே பிளஸ் ஒன் மாணவர்களுக்கான வினா மாதிரி வழிகாட்டலை கொண்டு வர வேண்டும் அப்பொழுதுதான மாணவர்கள் ஒரு முறை பயிற்சி பெறவதற்கு வசதியாக இருக்கும் . பொதுத்தேர்வுக்கு தயாராக்க வழிக்காட்டும்.
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












