சென்னை: பள்ளிப் பாடப் புத்தகங்களை அனைத்து மாநில அரசுகளும் தங்களது இணையதளங்களில் என்று தேசிய கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில்(என்சிஇஆர்டி) அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து என்சிஇஆர்டி இயக்குநர் எச்.கே. சேனாபதி கூறியதாவது: தற்போது இணையதளப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. செல்போன்களில் இணையதளத்தைப் பயன்படுத்துவோரும் அதிகரித்து வருகின்றனர். அதைப் போலவே மாணவர்களும் ஹை-டெக்காக மாறி வருகின்றன. எனவே சிபிஎஸ்இ பாடத் திட்டங்களை e-pathsala என்ற மொபைல் ஆப்-ஐ உருவாக்கி அதில் பதிவேற்றம் செய்துள்ளோம்.
அதைப் போலவே அனைத்து மாநில அரசுகளும் தங்களது பாடத் திட்டங்களை இணையதளத்தில் பதிவேற்ற அறிவுறுத்த முடிவு செய்துள்ளோம்.
இதற்கான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு தந்துள்ளோம். மேலும் மாணவர்களின் கல்வியறிவுத் திறனை மேம்படுத்துவது தொடர்பாக யோசனைகளையும் வழங்கி வருகிறோம்.
அடுத்த ஆண்டில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது இந்திய கல்வி முறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்றார் அவர்.