வரும் கல்வியாண்டு முதல் 3 மற்றும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) அறிவித்துள்ளது.
அதேநேரத்தில் மற்ற வகுப்பினருக்கான பாடத்திட்டங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் ஏராளமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அமைப்பு வடிவமைத்து வருகிறது.
இதற்கிடையே, வரும் 2024 - 25ம் கல்வியாண்டில், 3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்களை மாற்ற உள்ளதாக, என்.சி.இ.ஆர்.டி., அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ.,க்கும் தகவல் அனுப்பியுள்ளது.
3, 6-வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம்
வரும் கல்வியாண்டு முதல் 3 மற்றும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) அறிவித்துள்ளது.
அதேநேரத்தில் மற்ற வகுப்பினருக்கான பாடத்திட்டங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் ஏராளமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அமைப்பு வடிவமைத்து வருகிறது.
இதற்கிடையே, வரும் 2024 - 25ம் கல்வியாண்டில், 3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்களை மாற்ற உள்ளதாக, என்.சி.இ.ஆர்.டி., அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ.,க்கும் தகவல் அனுப்பியுள்ளது.
புதிய பாடத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, பள்ளி முதல்வர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தலைவருக்கு என்சிஇஆர்டி (NCERT) இயக்குனர் தினேஷ் சக்லானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, சி.பி.எஸ்.இ., இயக்குநர் ஜோசப் இமானுவேல், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு
னுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
புதிய தேசிய கல்வி கொள்கையின்படி, 3 மற்றும் 6ம் வகுப்பு களுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதற்கான புத்தகங்கள் அச்சடிக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.
வரும் கல்வியாண்டில், 3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்களை பின்பற்ற வேண்டும்.
மற்ற வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களில் எவ்வித மாறுதலும் இல்லை. இவ்வாறு சி.பி.எஸ்.இ., இயக்குநர் ஜோசப் இமானுவேல் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, சி.பி.எஸ்.இ., இயக்குநர் ஜோசப் இமானுவேல், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு
னுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
புதிய தேசிய கல்வி கொள்கையின்படி, 3 மற்றும் 6ம் வகுப்பு களுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதற்கான புத்தகங்கள் அச்சடிக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.
வரும் கல்வியாண்டில், 3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்களை பின்பற்ற வேண்டும்.
மற்ற வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களில் எவ்வித மாறுதலும் இல்லை. இவ்வாறு சி.பி.எஸ்.இ., இயக்குநர் ஜோசப் இமானுவேல் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications












