தேசிய விளையாட்டுதினம் இன்று தியான் சந்த் அவர்களின் 112 ஆம் பிறந்ததினம் இன்று பின்ப்பற்றப்படுகிறது நாட்டின் பிரதமர் முதல் அனைவரும் அவருக்கான மரியாதை செலுத்துவதுடன் அவரது அளவற்ற சாதனையை நாம் நினைவு கொள்ள இந்திய இளைஞர்களுககொரு நல்லவாய்ப்பு ஆகும் .
இந்திய சுதந்திர போராட்டமும் தியான் சந்து தங்கமும் :
1928 களில் நாடே சுதந்திரத்தினத்துக்கான போரட்டத்தில் முழுமூச்சாக இறங்கி கொண்டிருக்க இந்தியாவில் பிறந்து ஹாக்கியில் வெற்றி கொடிக்கட்டி வாழ்ந்தவர் மேஜெர் தியான் சந்த் ஆவார்.
1928, 1932, 1936 களில் ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம் பெற்றவர் . வெற்றி என்னும் கொடியை நட்டியவர் . அடித்து ஆடுதல் ,சிறந்த தடுப்பு ஆட்டகாரர், அத்துடன் பந்தை தடுத்து செல்வதில் வல்லவர் என சிறந்து விளங்கியவர் ஆவர்.
1948 வரை விளையாடி வந்தார் . புயல்வேக ஆட்டக்காரர் இந்தியாவுக்காக
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் அவரை சிறப்பிக்கவே அவரது பிறந்தநாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுகிறது .
இந்தியாவில் அவரை முன்னிருத்தி இன்றைய மகளிர் , ஆடவர் விளையாட்டு வீரர்கள் சிறந்து விளையாடுகின்றனர் . அத்துடன் அன்றைய அவரது கால ஆட்டங்கள் இன்றைய மாணவர்கள் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதரணமாக இருந்தவர் மற்றும் இருப்பவர் மேஜர் தியான்சந்த் . இந்தியாவில் விளையாட்டு வீரர்களை கௌரவிக்க அர்ஜுனா விருது , இராஜிவ் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன.
தேசிய விளையாட்டு வீரர்கள் :
இந்திய தேசிய விளையாட்டு தினமான இன்று நாம் இன்னும் அடையாளம் கண்டு பிடிக்கப்பட வேண்டிய விளையாட்டு வீரர்கள் திறன் படைத்த வீரர்கள் நாட்டில் அதிகரித்து உள்ளனர் . 30 கோடி பேர்க்கு ஒரு தியான் சந்த் எனில் 120 கோடி பேருக்கு இந்தியாவில் 4 முதல் 10 தியான் சந்த்கள் இருக்க வேண்டிய காலகட்டம் இது ஆனால் நமது விளையாட்டு வீரர்களை இன்னும் நாம் தேடி கொண்டிருக்கிறோம் .
1928 களில் குறைந்த வசதிப்படைத்த காலகட்டத்தில் தியான் சந்த் திறம்பட செயல்ப்பட்டார் எனில் இன்றைய காலகட்டங்களில் இன்னும் திறன் பட செயல்படும் விளையாட்டு வீர்ர்கள் வீரங்கணைகள் வீதியோடு விளையாட்டை நிறுத்தி கொள்கின்றனர் .
இந்தியாவின் ஒவ்வொரு வீதிக்குள்ளும் ஒரு தியான் சந்தை காணலாம் நாம் ஆனால் அவர்களை சரியாக இனம் கண்டு வழிநடத்த என்ன செய்தோம் , இனி என்ன செய்ய போகிறோம் என்பது எழுபது வருடமாக கேள்விகளாகவே இருக்கின்றது .
நாட்டிலுள்ள ஒவ்வொரு சந்தாக தேடினால் நாம் 4 லட்ச வீரர்களை காணலாம் . விளையாட்டில் இணைத்தால் இந்தியா இன்னொரு விளையாட்டு ஆர்மியை திரட்டலாம் . ஆனால் அதற்கு நாம் தயாராக வேண்டிய நேரம் எது இதுவது அதுவா என்று இன்னும் திட்டங்களால் தீண்டப்படாமல் தேச வீர்ர்கள் கிடப்பது யாருக்கு பெருமையென்று உரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
விளையாடும் தகுதி :
எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும் அது எவ்வளவு உறுதியாக இருக்கின்றது அவ்வளவு உறுதியாக திறன் படைத்தவர் வெல்வது நிச்சயமாகும் ஆனால் அது குறித்து சிந்திக்கும் வரை , உறுதியாக விளையாடும் வரை ஒலிம்பிக்கில் ஒரு மெடல் சோக கீதம்தான வாசிக்க முடியும் .
வியாபாரம் , ஏற்றுமதி இறக்குமதி கோல்லோச்சும் நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு பஞ்சமென்றால் பசிபிக் கடலோரம் வாழும் கரைகள் கூட நம்பாது . தடைகளை உடைத்து வாருங்கள் உங்களது தகுதி வெளிப்ப்டுத்தும் போதுதான வேதனையிலும் சாதனை செய்ய முடியும் . இப்படிக்கு வருங்கால தியான் சந்த்களுக்காக காத்திருக்கும் இந்திய தேசம் வாய்மூடி கிடக்குமா என் மாணவ தேசம் என்று தனியும் இந்த ஒலிம்பிக்கில் ஒரு மெடல் தாகம் !!!!!...... இப்படிக்கு இந்திய மாணவர்கள் இளைஞர்களை நம்பி எதிர்கால இந்தியா!,,,,,
சார்ந்த பதிவு :
72 வருடங்களை தாங்கி நிற்கும் சுபாஷ் சந்திரபோஸ் சகாப்தம்
செய் அல்லது செத்துமடி, ஜெய்ஹிந்த் இரண்டும் 75 வருடங்களை கடந்து நிற்கிறது