ஆடு, கோழி வளர்க்க ரூ.50 லட்சம் மானியம்
கோழி, செம்மறி ஆடு வளர்ப்புக்காக, மத்திய அரசு ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
படித்தும் வேலை கிடைக்கவில்லையே என்ற கவலையை உடனே விட்டு விட்டு, கால்நடை வளர்ப்பின் வாயிலாக நீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம் யூத்ஸ்...!

நோக்கம் தெரியும்?
திட்டத்தின் நோக்கமானது, புறக்கடை கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவன பயிர் சேமிப்பு மற்றும் மேம்படுத்துதல், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டினத்தை மேம்படுத்துதல் மற்றும் தீவன உற்பத்தி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தொழில் முனைவோரை உருவாக்குவது ஆகும்.
பயனாளிகள் யார்?
புதிய திட்டத்தின் கீழ், தனி நபர், சுய உதவி குழுக்கள்(SHG), விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு(FPO), விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள் (JLG), பிரிவு-8 நிறுவனங்கள் ஆகியவை தகுதியானவர்கள்.
தொழில்முனைவோர் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும்.
தொழில்முனைவோர்/தகுதியுள்ள நிறுவனங்கள் திட்டத்திற்கான வங்கி கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதத்தை பெற வேண்டும்; திட்ட மதிப்பீட்டிற்கான அங்கீகாரத்தினையும் பெற வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
பயன் விரும்பும் நபர்கள் https://nlm.udyamimitra.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
நீங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள், இத்திட்டத்தை மாநில அளவில் செயல்படுத்தும் நிறுவனமான தமிழ் நாடு கால்நடை மேம்பாட்டு முகமையின் திட்ட மதிப்பீட்டு குழுவால் பரிசீலிக்கப்பட்டு, திட்ட வழிகாட்டுதலின்படி உள்ளவற்றை கடன் வசதி பெற வங்கிக்கு அனுப்பப்படும்.
பின் மத்திய அரசின் அங்கீகாரம் பெற அனுப்பப்படும்; பணிகள் நிறைவு பெறுவதன் அடிப்படையில், மானியம் இரு தவணைகளில் வழங்கப்படும்.
பங்கு பெற அழைப்பு...!
கால்நடைகள் சார்ந்த தொழில் மேற்கொள்ள முனைவோர் இத்திட்டத்தில் பங்கேற்று, கால்நடை பெருக்கத்தில் பங்கு பெற்று பயன் பெறலாம் என, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் கோழி வளர்க்க முனைவோர் 1000 நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வழி கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து, நான்கு வார வயது வரை வளர்த்து விற்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க முனைவோருக்கு 500 பெண் ஆடுகள் + 25 கிடா கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.
பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு 100 பெண் பன்றிகள் + 25 ஆண் பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் பாதுகப்பிற்காக, ஓராண்டில் 2000-2400 மெட்ரிக் டன் வைக்கோல் / ஊறுகாய் புல் /ஒரு நாளில் 30 மெட்ரிக் டன் மொத்த கலப்பு தீவனம் / தீவன கட்டி தயாரித்தல் மற்றும் சேமித்தல் பணிகளை மேற்கொள்ள முனைவோர்க்கு தளவாடங்கள் வாங்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
டவுன்லோடு ப்ளீஸ்...!
திட்டம், மானியம் உள்ளிட்ட முழு விவரங்களை அறிய விரும்பும் நபர்கள் கீழே உள்ள இணையதளங்கள் வாயிலாக பதிவிறக்கம் செய்து, படித்து அறிந்து கொள்ளலாம்.
அல்லது பொறுமையாக படித்து பார்த்து அறிய நேரமில்லை என நினைக்கும் இன்றைய தலைமுறையினர் முழு விவரங்கள் அறிய அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் சென்னை, தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமை அலுவலர்களை தொடர்பு கொண்டு அறியலாம்.
http://www.tenders.tn.gov.in/innerpage.asp?choice=tc5&tid=tnl202901&work=1
https://dahd.nic.in/sites/default/filess/NLM Guidelines Final approved by EC .pdf


Click it and Unblock the Notifications












