நாடு முழுவதும் கொண்டாடப்படும் தேசிய கல்வி நாள்

நாடு முழுவதும் கொண்டாடப்படும் கல்விதினம் இன்று

By Sobana

சுதந்திரதினத்தின முதல் கல்வி அமைச்சர் மௌலானா ஆஷாத் அவர்களின் பிறந்த தினம் இன்று. இன்று முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆஷாத் அவர்களின் பிறந்த தினமான இன்று கல்விநாள் கொண்டாடப்படுகிறது.

தேசிய கல்விநாளான இன்று புதிய கல்வி கொள்கை குறித்து அறிவிக்கவுள்ளது

சுதந்திரத்திற்கு பின் நாட்டில் மிகசிறந்த கல்வி சேவையை ஆற்றிய நமது விடுதலை போராட்ட வீரரும் நாட்டின் முதல் கல்வி அமைச்சராக இருந்த அபுல் கலாம் ஆஷாத் அவர்கள் 1947 முதல் 1958 வரை கல்வி அமைச்சராக இருந்து சிறப்பான பங்காற்றினார் .

அவரது பிறந்த தினத்தை நினைவு படுத்தி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சரகம் மற்றும் நாடு முழுவதும் முக்கிய கல்வி நிறுவனங்களில் கொண்டாட்டம் நிகழ்த்தப்படுகிறது.

யுஜிசி , ஜவஹர்லால் நேரு, சென்னை பல்கலைகழகம் வரை பல்வேறு நிறுவனங்களில் கொண்ட்டாட்டம் நிகழத்தப்படுகிறது.

நாட்டில் இன்று வரை கல்வி கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் புகுத்தப்பட்டு மாணவர்களுக்கு சிறப்பான சேவைகள் ஆற்றப்பட்டு வருகின்றன.

இந்திய கல்விகுழுக்கள்:

இன்றைய காலகட்டதில் இதுவரை இந்திய கடந்து கல்விகுழுக்களின் பார்வையை அறிந்து கொள்வோம். சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி குழு பல்கலைகழகத்தை ஆராய டாக்டர் இராதகிருஷணன் தலைமையில் உருவாக்கப்பட்டது.இக்குழு ஆரம்ப கல்வி குறித்து பேசி அதற்கு முக்கியத்துவம் கொடுத்தது.

டாக்டர் இலட்சுமணசுவாமி அவர்கள் தலைமையில் 1952ல் உருவாக்கப்பட்ட குழு இது பெண்கல்வியை வலியுறுத்தி பெண்களுக்கு கல்வி மேம்பாட்டை உறுதிசெய்தது இந்த கல்வி குழுவின் வேலை ஆகும்.

கோத்தாரி கல்விகுழு மண்ணின் ஆதார தன்மையை முத பறிந்துறைத்தது இக்குழு தான் நேருவால் 1962 இல் உருவாக்கப்பட்ட குழுதான் சிறப்பு வாய்ந்த குழுவாகும்.

ராஜிவ் உருவாக்கிய கல்வி குழு மதிப்பெண்களை உருவாக்கும் கல்விகுழுவாக இருந்தது . ஆங்கிலமே வேலைவாய்ப்பு தரும் என்பதால் பட்டிதொட்டியெல்லாம் நர்சரிகள் முளைத்தன. பில்கேட்ஸின் பணியாட்களால் உருவாக்கபட்ட குழு என விமர்சிக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு சாதிமத வர்க்க பேதமின்றி ஒரே மாதிரி கல்வியை கொண்டு வர உருவாக்கப்பட்டதுதான் யஷ்பால் கல்வி கொள்கை.

மோடி காலத்தில் இப்பொழுது மீண்டும் திறன் படைத்த கல்வியாளர்களை உருவாக்க உருவாக்கப்படும் புதிய கல்வி கொள்கை கஸ்தூரி ரங்கன் தலைமையில் புதிய கல்வி கொள்கை குழு உருவாக்கப்பட்டு என அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி கொள்கையின்யில் திறன் மேம்பாடு மாணவர்களின் செயல் வேகம் அதிகரிக்க செய்தல் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான கொள்கைகள் குறித்து பேசப்படுகிறது . எதிர்காலத்தில் சிறப்பான கல்வி கொள்கைகள் அமைக்கப்பட்டு மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்க உதவுகிறது என மக்களால் நம்பபடுகிறது.

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about national education day
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+