சென்னை: மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில்(எம்ஆர்பிஎல்) எக்ஸிகியூட்டிவ்(இன்டர்னல் ஆடிட்) பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் வரும் பிப்ரவரி 8-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும்.
மொத்தம் 2 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சிஏ, ஐசிடபிள்யூஏ, எம்பிஏ படித்திரு்ககவேண்டும். வயது 43-க்கு மிகாமல் இருக்கவேண்டும்.
குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுச் சலுகை உண்டு.
நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். தகுந்த ஆவணங்களுடன் Sr.Manager (HR-Recruitment), Mangalore Refinery and Petrochemicals Limited, Post - Kuthethur, Via Katipalla, Mangalore என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை பிப்ரவரி 8-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
ஓஎன்சிஜி நிறுவனத்தின் துணைநிறுவனம்தான் இந்த எம்ஆர்பிஎல் ஆலை. 1988-ல் இது அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 15 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்தது இந்த ஆலை.