சென்னை: தமிழகத்தில் லேப்-டெக்னீஷியன்கள் பணியிடங்களை மருத்துவ சேவை நியமன வாரியம்(எம்ஆர்பி) விரைவில் நிரப்பவுள்ளது.
தகுதியும், திறமையும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 17-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். மொத்தம் 524 லேப்-டெக்னீஷியன் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இவை அனைத்து கிரேட்-2 பிரிவு இடங்களாகும்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க மெடிக்கல் லெபாரட்டரி டெக்னாலஜி படிப்பில் டிப்ளமோ முடித்திருக்கவேண்டும். மேலும் இந்தப் படிப்பை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் படித்திருக்கவேண்டும் அல்லது தமிழக அரசு அங்கீகரித்துள்ள ஏதாவது ஒரு இன்ஸ்டிடியூட்டில் இந்தப் படிப்பைப் படித்திருக்கவேண்டும்.
வயது 18 முதல் 30-க்குள் இருக்கலாம்.
ஏற்கெனவே படித்த படிப்புகளின் அடிப்படையில் ஆட்கள் இந்தப் பணியிடங்களு்ககுத் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பணிக்கு நேர்முகத் தேர்வு இருக்காது.
தகுதியுடையவர்கல் இந்தப் பணிக்கு விண்ணப்பங்களைத் தபால் மூலம் அனுப்பலாம். பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படும். இதேபோல எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 மட்டுமே வசூலிக்கப்படும்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.