சென்னை: பிராஸ்தெட்டிக் கிராஃப்ட்ஸ்மேன் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு மருத்துவ சேவை தேர்வாணையம்(எம்ஆர்பி) வரவேற்றுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கண்டிப்பாக 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் பிராஸ்தெட்டிக்ஸ் மற்றும் ஆர்த்தொட்டிக்ஸ் பிரிவில் டிப்ளமோ படித்திருக்கவேண்டும்.
வயது 18 முதல் 30-க்குள் இருக்கவேண்டும். படிப்பில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டே இந்த பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் பிப்ரவரி 10-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ஓபிசி பிரிவினருக்கு ரூ.500 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 வசூலிக்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு http://www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தைக் காணலாம்.
தமிழ்நாடு அரசால் மருத்துவ சேவை தேர்வாணையம் அமைக்கப்பட்டது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்து வருகிறது எம்ஆர்பி.