சென்னை: கொடுமை...கொடுமைன்னு கோயிலுக்கு போனா...அங்க 2 கொடுமை ஜிங்கு...ஜிங்குன்னு ஆடுச்சாம்னு கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு...அதுபோலத்தான் இருக்கிறது இந்தச் செய்தியின் உண்மை.
உத்தரப்பிரதேச மாநில தலைமைச் செயலகத்தில் காலியாகவுள்ள 368 பியூன் வேலைக்கு விண்ணப்பங்களை வரவேற்றது அந்த மாநில அரசு.
இந்தப் பணியிடங்களுக்கு ஏராளமான விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. இந்த விண்ணப்பங்களில் 17,47, 824 விண்ணப்பங்கள் பெரும்பாலும் பட்டப்படிப்பு முடித்தவர்கள். இதில் 201 விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் பிஎச்.டி ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள் என்பதுதான் கொடுமை.
இதில் 20 ஆயிரம் பேர் பட்டமேல்படிப்பை முடித்தவர்கள். மேலும் 8 லட்சம் பேர் மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்தவர்கள் என்பதுதான் கொடுமையான விஷயம்.
கிட்டத்தட்ட 20 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதால் அதை சரிபார்த்து ஆட்களைத் தேர்வு செய்து உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு பெரிய தலைவலியாகியுள்ளது.
பியூன் வேலைக்குக் கூட பிஎச்.டி. மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதால் அந்த மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது என்று சொல்கிறார் கல்வி நிபுணர்கள்.