சென்னை: மாணவர், ஆசிரியர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கி வருகிறது இ-சிபிஎஸ்சி மொபைல் அப்ளிகேஷன். மாணவர்களுக்கு உதவும் வகையில் சிபிஎஸ்இ கல்வி வாரியமானது கடந்த ஆண்டு E-CBSE என்ற மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்தது.
இந்த மொபைல் அப்ளிகேஷனுக்கு மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் பெரிய அளவிலான வரவேற்புக் கிடைத்துள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலம் ஆசிரியர்களும், மாணவர்களும், இலவசமாக இ-லெர்னிங் மெட்டீரியல்களை, மொபைல்போன் மூலமாக பெற முடியும்.
இந்த அப்ளிகேஷனானது ஆசிரியர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. கல்வி பயற்றுவிக்கும் மெட்டீரியல்களையும் இந்த அப்ளிகேஷன் வழங்குகிறது. பிரதமரின் டிஜிட்டல் இந்தியா கனவு இதன்மூலம் நிறைவேறி வருகிறது என்று கல்வி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மொத்தத்தில் இது மாணவர்களுக்கு வரப்பிரசாதமான அப்ளிகேஷன் என்று புகழ்ந்து தள்ளுகின்றனர் ஆசிரியர்களும், மாணவர்களும்.