நிகர்நிலை பல்கலைகழக கழங்களில் பெறப்படும் கட்டணங்களை குறித்து குழு அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது .
சென்னை உயர்நீதிமன்றத்தில் விபி .ஆர்.மேனன்,ஜவர்ஹர்லால் சண்முகம் தனித்தனியாக தாக்கல் செய்த பொதுநல மனுவில் தமிழகம் மற்றும் புதுசேரியில் பல்வேறு நிகர்நிலை பல்கலைகழகங்களில் பல்வேறு மருத்துவ கல்லுரிகளில் அதிகநிதி வசூலிக்கப்படுகிறது . சுமார் 18 லட்சம் முதல் 40 இலட்சம் வரை கட்டணம் பெறுகின்றனர்.

நீட் தேர்வில் அதிக மதிபெண் பெற்றிருந்தாலும் நிகர்நிலை பல்கலைகழக கல்லுரிகளில் படிக்க வேண்டுமென்றால் அவர்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தை செலுத்த வேண்டும் . நிகர்நிலை பல்கலைகழகங்களின் கீழ் இயங்கும் கல்லுரிகளில் அதிகபடியான கட்டணத்தை வசூலிப்பதை தடுக்க வேண்டும் . பணம் படைத்தவர்கள் மட்டும் படிப்பதற்க்கு உதவிகரமாக இருக்கின்றன கல்லுரிகள் இதனை தடுத்து தனியார் கல்லுரிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என கோரப்பட்டது .
மருத்துவ கட்டணம் குறித்து விசாரித்த நீதிபதிகளான இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. முதல் பெஞ்ச் உத்தரவில் மத்திய குடும்ப நலம் சுகாதார குழு அமைச்சகம் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.
மருத்துவ கட்டண குழுவை பல்கலைகழக மாணியக்குழு யுஜிசி இரண்டு வாரத்திற்க்குள் அமைக்கவேண்டும் . வழக்கு விசாரணை வரும் 18 ஆம் தேதிக்குள் தள்ளி வைக்கப்படுகிறது .
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












