மருத்துவம் பல்மருத்துவ படிப்பு மாணவர் தரவரிசைப் பட்டியல் மாணவர் சேர்க்கைகாக தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்படுகிறது . நாளை முதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் நீட்தொடர்பான சிக்கலில் மருத்துவ கலந்தாய்வில் ஏற்ப்படுத்தப்பட்ட தாமதத்தால் மாணவர்கள் பெற்றோர்கள் மிகுந்த குழப்பநிலைக்கு ஆளானார்கள் , நீதிமன்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்களால் தாமதமான மருத்துவம், பல் மருத்துவ கலந்தாய்வு மீண்டும் நீதிமன்ற உத்தரவால் நடைபெறுகிறது .

நீட் தேர்வு எழுதுவதிலிருந்து தமிழகத்து ஓராண்டு விலக்கு பெற்றுள்ளது . நீட் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது அதற்கு மத்திய அரசு மற்றும் சட்ட அமைச்சகம் அதற்கு ஒப்புதல் அளித்து வந்தது .
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவசர சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவ்வழக்கை விசாரித்த போது நீட் தேர்விலிருந்து தமிழகத்தின் அவசரசட்டத்துக்கு ஒப்புதல் வழங்க முடியாது . நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விலக்கு அளிக்க முடியாது என்ற விளக்கம் அளித்திருந்தது .
உச்ச நீதிமன்றம் மருத்துவ கலந்தாய்வை செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது . உச்ச நீதிமன்றம் உத்தரவை அடுத்து நீட் தேர்வு அடிப்படையில் இன்று மதிபெண் வெளியிடும் நாளை முதல் கலந்தாய்வு நடைபெறும் .
மாற்று திறனாளிகளுக்கு நாளை தொடங்கும் கலந்தாய்வு நடத்தப்படும் 3546 இடங்கள் தமிழகத்தில் உள்ளன. சுயநிதி பல் மருத்துவ கல்லுரிகளிலும் 2445 இடங்கள் உள்ளன. ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் சாதரணமான மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்க அவகாசம் உள்ளதால் தமிழக அரசு விரைந்து செயல்படுகிறது. மாநில ஒதுக்கீட்டில் உள்ள மாணவர்களுக்கும் இன்று தரவரிசை வெளியிடப்படும் .
சார்ந்த பதிவுகள் :


Click it and Unblock the Notifications












