தனியார் மருத்துவ கல்லுரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் சென்னையில் வியாழ கிழமை கலந்தாய்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 24 ஆம் நாள் முதல் நடைபெற்று வருகின்றது . முதல் கட்டமாக அரசு மருத்துவ கல்லுரிகளுக்கும் தனியார் மருத்துவ கல்லுரிகளுக்கும் உள்ள அரசு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது . இவ்விடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 30 ஆம் தேதி நிறைவடையவுள்ளது.
தமிழகத்திலுள்ள 10 தனியார் மருத்துவ கல்லுரிகளில் , 18 தனியார் மருத்துவ கல்லுரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு ஆகஸ்ட் 31 அன்று நடைபெறும்.
கலந்தாய்வு அட்டவணை www.tnhealth.org, tnmedicalselectionorg இணையதளங்களில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது . நீட் மதிபெண் அடிப்படையில் 655 முதல் 217 வரை மதிபெண் பெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பங்கேற்கலாம் . தனியார் கல்லுரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் உள்ளன.
வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு படிப்பு கட்டணமாக எம்பிபிஎஸ் படிப்புக்கு 23.5 லட்சமும் , பிடிஎஸ் படிப்புக்கு 9 லட்சமும் கட்டணம் நிர்ண்யிக்கப்படுகிறது . மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரர் பல்நோக்கு மருத்துவமணையில் காலை 10 மணி முதல் மூன்று பிரிவாக கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்களுக்கான அனைத்து வசதிகளும் முறையாக செய்யப்பட்டுள்ளன.
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












