தமிழகத்தில் எம்பிபிஎஸ் சேர்க்கை குழப்பம் நீடிப்பு மாணவர்களின் மெடிக்கல் படிப்பு சேர்க்கை குறித்து எம்சியை தமிழக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளன .
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மாண்வர் சேர்க்கை குறித்து மருத்துவ கல்வி இயக்குநகரகத்திடம் எம்சிஐ எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம் கேட்டுள்ளது .
தனியார் மற்றும் அரசு கல்லுரிகளில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு . அதன்டி நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதினார்கள் அதில் தமிழகத்தில் மட்டும் 88 ஆயிரம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். மே 7 ஆம் தேதி தேர்வு நீட் தேர்வு நடத்தப்ப்ட்டது .
இந்நிலையில் நீட் தேர்வு முடிவு வெளியிட மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது . ஆனால் அந்த தடையை இரத்து செய்தது உச்சநீதிமன்றம் . இதனால் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கவுன்சிலிங் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்தது . இதனையடுத்து மருத்துவ படிப்புகளுக்கான சேர்கை விவரங்கள் குறித்து மருத்துவ கவுன்சிலிங் கேட்ட கேள்விக்கு தமிழக மருத்துவ கல்வி இயக்க அதிகாரிகள் தமிழக அரசின் அறிவுரைக்காக காத்திருப்பதாக பதிலளித்தது .
நீட் தேர்வு தமிழகத்தில் நடத்தவா வேண்டாமா என்ற குழப்ப நிலைகள் நீடித்தன ஒரு வழியாக உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி தேர்வுகள் நடத்தப்பட்டன அக்கேள்வித்தாள் தரத்திற்கு அரசு பள்ளிகளின் பாடத்தரமில்லை என விமர்சனங்களால் அடுத்த வருடம் புத்தகங்கள் மாற்றம் குறித்து தமிழக அரசு ஆணைகள் புதுபித்தன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் .