சென்னை: குருஷேத்ராவில் அமைந்துள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(என்ஐடி) உயர்கல்வி நிறுவனத்தில் எம்பிஏ படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இங்கு எம்பிஏ படிப்பில் சேர குறைந்தபட்சம் பட்டப்படிப்பை முடித்திருக்கவேண்டும். கேட், மேட், சிமேட், ஜிமேட் தேர்வில் மாணவ. மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இந்தப் படிப்புக்கு அவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதன் பின்னர் அவர்களுக்கு குழு விவாதம் நடத்தப்படும். அதன் பின்னர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த மூன்றில் வெற்றி பெற்றால்தான் அவர்கள் எம்பிஏ படிப்பில் சேர முடியும்.
இந்தப் படிப்பில் சேர்வதற்கு என்ஐடி அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பங்களை டவுன்லோடு செய்துகொள்ளவேண்டும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களை இணைத்து தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
கல்வித் தகுதி, விண்ணப்பத் தேதி போன்ற விவரங்களை http://www.nitkkr.ac.in என்ற இணையதளத்தில் பெறலாம்.
நேர்முகத் தேர்வு, குழு விவாதத் தேதிகள் அநேகமாக ஏப்ரல் மாதம் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications












