டெல்லி: மகாராஷ்டிரத்தில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அம்மாநிலத்தின் பொதுப் பணியாளர் தேர்வாணையம்(எம்பிஎஸ்சி) தேர்வுகளை நடத்தவுள்ளது.
மொத்தம் 63 பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மே 3-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஓவியம் வரைதல் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து இந்த படிப்பை அவர்கள் படித்திருக்கவேண்டும்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://www.mpsc.gov.in/1035/Home என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
இந்த வேலையில் சேர வயது 35-க்குள் இருக்கவேண்டும். சம்பளம் ரூ. 15,600 முதல் ரூ. 39,100 என்ற அடிப்படையில் இருக்கும். மேலும் மாதம்தோறும் ரூ.5,400 கிரேட் பே தரப்படும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.523 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இது ரூ.323 என்ற அளவில் இருக்கும்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஆன்-லைன் தேர்வு அல்லது எழுத்துத் தேர்வு இருக்கும். அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு இருக்கும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
எம்பிஎஸ்சி-யின் இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பங்களை மே 3-ம் தேதிக்குள் அனுப்பலாம்.


Click it and Unblock the Notifications












