புதுடெல்லி: சிபிஎஸ்இ பிரிவில் எட்டாம் வகுப்பு வரை மராத்தி பாடத்தைக் கட்டாயமாக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளது.
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி பள்ளிகளிலும் மராத்தி பாடத்தைக் கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது.
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மராத்தி பாடத்தைக் கட்டாயமாக்க கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றன. மாநிலத்திலுள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகள், சர்வதேச பள்ளிகளிலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் பாடத் திட்டத்தில் சத்ரபதி சிவாஜி வரலாற்றையும் சேர்க்க முடிவு செய்யப்படடுள்ளது என்று மகாராஷ்டிர மாநில கல்வித்துறை அமைச்சர் வினோத் தாவ்தே சட்டப் பேரவையில் தெரிவித்தார்.
விரைவில் இந்தத் திட்டம் அமலுக்கு வரும் என்றும், ஆட்சேபம் இல்லா சான்று (என்ஓசி) பெற விரும்பும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் 8-ம் வகுப்பு வரை மராத்தி பாடம் கட்டாயம் என்பதை அமலாக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது சிபிஎஸ்இ பள்ளியில் 7-ம் வகுப்பு வரை மட்டும் மராத்தி பாடம் கட்டாயம் என்ற திட்டம் அமலில் உள்ளது.