சென்னை: ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்கள் காலியாகவுள்ளாக மகாராஷ்டிர மாநில அரசு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 25-ம் தேதிக்குள் அனுப்பலாம்.
மொத்தம் 80 ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்கள் அரசில் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்குத் தேவையான தகுதிகள் அனைத்தையும் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் நபர்கள் அரசின் பல்வேறு பணியிடங்களில் சேர்க்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர். சிவில் என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ படித்திருக்கவேண்டும்.
சம்பளம் ரூ.9,300 முதல் ரூ,34,800 பிளஸ் ரூ., 4,300 என்ற அடிப்படையில் வழங்கப்படும்.
வயது 18 முதல் 38-க்குள் இருக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மகாராஷ்டிர மாநில அரசின் இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி மே 25 ஆகும்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம், பணி அமர்த்தப்படும் இடம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://www.maharashtra.gov.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












