சென்னை: மகாராஷ்டிரா பார்மஸி கல்லூரியிலுள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 27-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மொத்தம் 13 இணை பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இங்கு பணியாற்ற விருப்பமுள்ளோர் விண்ணப்பங்களைத் தகுந்த ஆவணங்களுடன் I/c Principal, Maharashtra College of Pharmacy, Nilanga. 413 521 Dist. Latur. (Maharashtra) என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பவேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஜனவரி 27 ஆகும்.
கல்வித் தகுதி, சம்பளம், வயதுச் சலுகை உள்ளிட்ட விவரங்களை http://mcpnilanga.org என்ற இணையதள முகவரியில் காணலாம்.
இந்தக் கல்லூரி மகாராஷ்டிர சிக்ஷன் சமிதி அமைப்பின் ஆதரவுடன் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் டாக்டர் சிவாஜிராவ் பாட்டீல் நிலாங்கேகரால் தொடங்கப்பட்டது. தற்போது 35-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த மகாராஷ்டிர சிஷன் சமிதி.


Click it and Unblock the Notifications












