தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீடித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் அடுத்த உத்தரவு வரும் வரையில் அப்பள்ளிகளை மூடவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க கடந்த 2020 மார்ச் 25ம் தேதி முதல் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில், கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்த நிலையில், ஊரடங்கிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
ஊரடங்கில் தளர்வுகள்
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலிலிருந்து வருகிறது. மார்ச் மாதத்திற்கான ஊரடங்கு காலத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இந்நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மீண்டும் பொது ஊரடங்கு
இந்த நிலையில், கொரோனா தொற்றினால் பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்நோய் வேகமாக பரவியதால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூடப்பட்ட பள்ளிகள்
இந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலையாக மீண்டும் அதிகளவில் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இத்தொற்று அதிகளவில் பரவி வருவதால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளே இந்நோய் பரவ முக்கிய காரணமாக உள்ளது என பலரும் குற்றம் சாட்டினர்.
அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் 12-ஆம் வகுப்பைத் தவிர மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு இந்த விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் 9 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வர வேண்டாம் என அதிரடியாக அறிவித்துள்ளது.
ஊரடங்கை நீட்டித்த தமிழக அரசு
இதனிடையே, தமிழக அரசு மார்ச் 31 வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு ஏற்ப மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை
சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்க வருபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை
கோவை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில், 66 மாணவர்கள் தற்போது 12ம் வகுப்புக்கு வந்து செல்கின்றனர். இங்கு, 20 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், இப்பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு, கடந்த 26ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கவனத்திற்கு
முன்னதாக கடந்த மாதம் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில் 6 ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அப்பள்ளி மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. பள்ளிகளே இந்நோய் பரவ முக்கிய காரணமாக உள்ள நிலையில் ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.