ஜெஇஇ நடத்தும் ஐஐடிக்கான் நுழைவு தேர்வு வினா-விடை திருத்த நாளை இறுதி நாள் .ஆகவே மாணவர்கள் தங்களது வினா-விடை திருத்தம் தொடர்பான விண்ணப்பம் அளிக்க நாளை இறுதிநாளாகும் . மத்திய அரசின் ஐஐடிக்கான இன்ஜினியரிங் படிப்புக்கான மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்சி )நடத்தப்படும் கூட்டு நுழைவு தேர்வு ஜெஇஇ என்று அழைக்கப்படுகிறது .
ஜெஇஇ தேர்வுக்கான கட் ஆஃப்கள் வெளியிடப்பட்டுள்ளது .
பொது பிரிவு-81
பிற்ப்படுத்தப்பட்டோர்- 49
தாழ்த்தப்பட்டோர் -31
மலைவாழ் பிரிவினர்- 27
இத்தேர்வானது பம்பாய் , கான்பூர், மெட்ராஸ், ரூர்கி இணைந்து நடத்தும் தேர்வாகும். இத்தேர்வுக்கான கேள்விகள் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலம் பாடத்தில் இருந்து கேட்கப்படும். இரண்டு கேள்வித்தாள் கொண்டது. ஒவ்வொரு கேள்வித்தாளும் இரண்டு மணி நேரம் கொண்டவை ஆகும். வினாக்களுக்கான விடை கொள்ககுறியில் இருக்கும். திறனாய்வு செய்து விடையளிக்க கேள்விகள் அமையும் . மாணவர்கள் தங்கள் வினா-விடை திருத்தம் தொடர்பான கேள்வியை தெரிவிக்க மாலை ஆறு மணி வரை அவகாசம் உள்ளது . மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்ப நாளை வரை அவகாசம் உள்ளது .