சென்னை : லட்சுமி விலாஸ் வங்கியில் உள்ள புரபேஷனரி ஆபிஸர் பணிக்கு நாடுமுழுவதும் உள்ள காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 17 ஏப்ரல் 2017ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
வேலையின் தன்மை -
புரபேஷனரி ஆபிஸர்
கல்வித்தகுதி - ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
வேலை இடம் - இந்தியா முழுவதும்
கல்வித் தகுதி -
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை பயின்றிருக்க வேண்டும். அதில் 60% மார்க்குகள் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
வயது வரம்பு -
20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை -
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்க்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு முறை - எழுத்துத் தேர்வு 90 நிமிடங்கள் நடைபெறும்.
எண்ணியல் திறன் -25 கேள்விகள், பகுப்பாய்வு திறன் -25 கேள்விகள், வாய்மொழி திறன்-30 கேள்விகள், வங்கி விழிப்புணர்வு-40 கேள்விகள்
கணினி / பொது அறிவு-30 கேள்விகள் ஆக மொத்த 150 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு தேர்வில் கேட்கப்படும்.
தேர்வு நடைபெறும் இடங்கள் -
தமிழ்நாடு - சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, கரூர்
கர்நாடகா - பெங்களூர், புது தில்லி - தில்லி, தெலுங்கானா - ஹைதெராபாத், ஆந்திரப் பிரதேசம் - விசாகப்பட்டினம், மகாராஷ்டிரா - மும்பை,
மேற்கு வங்காளம் - மேற்கு வங்காளம், ஜார்கண்ட் - ராஞ்சி, குஜராத் - அகமதாபாத், மத்தியப் பிரதேசம் - போபால்
மேற்கண்ட இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக்கட்டணம் - ரூ. 650/- அனைத்து விண்ணப்பதாரர்களிடமும் வசூலிக்கப்படுகிறது.
முக்கிய தேதிகள் -
விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் - மார்ச் 29 முதல் ஏப்ரல் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நுழைவுச்சீட்டு - தேர்வு நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன்பு ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு நடைபெறும் நாள் - மே மாதம் எழுத்துத் தேர்வு நடைபெறும்.