சென்னை; கர்நாடக மாநில காவல்துறையில் 1,638 கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலியாகவுள்ள அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 5-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
மொத்தம் 1,638 பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஆண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் கர்நாடக மாநில ஆயுதப்படைப் பிரிவுக்கு அனுப்பப்படுவார்கள். கல்வித் தகுதி: எஸ்எஸ்எல்சி(சிபிஎஸ்இ), எஸ்எஸ்எல்சி(ஐசிஎஸ்இ), எஸ்எஸ்எல்சி(எஸ்எஸ்சி), எஸ்எஸ்எல்சி(மாநில கல்வி வாரியம்), எஸ்எஸ்எல்சி(இணையான படிப்பு).
வயதுத் தகுதி: 18 முதல் 27-க்கு மிகாமல் இருக்கவேண்டும். பழங்குடியினர் பிரிவுக்கு 18 முதல் 30 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி, சிஏடி-01, 2ஏ, 2பி, 3ஏ, 3பி பிரிவினர் 18 முதல் 27 வயது வரை இருக்கலாம். பொதுப் பிரிவினருக்கு வயதுச் சலுகை 18 முதல் 27 வரை மட்டுமே. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பிப்ரவரி 5-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு http://www.ksp.gov.in/pcw/policeit-overview.php என்ற முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.