சென்னை: ரக்பி விளையாட்டிலும் சாதித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்திலுள்ள கேஐஎஸ்எஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள்.
இந்தியாவிலுள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்வது கேஐஎஸ்எஸ் பல்கலை எனப்படும் கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் பழங்குடி மாணவர்களுக்காக தொடக்கக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்டஙகளை வகுத்தவர் பல்கலைக்கழக நிறுவனர் டாக்டர் அச்சுதா சமந்தா.
இந்த பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியுடன் விளையாட்டிலும் பெருமளவில் சாதித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
குறிப்பாக ரக்பி விளையாட்டில் இந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 13 வயதுக்குள்ப்டடோர் அணி சாதித்து வருகிறது. இந்த அணி லண்டனில் நடைபெறவுள்ள டூராய்ட் 13 வயது்க்குள்பட்டோர் சர்வதேச சிறுவர் ரக்பி போட்டிக்காக லண்டன் சென்றுள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா, லாவோஸ், கென்யா, போட்ஸ்வாா, உகாண்டா, ஸ்வாசிலாந்து, ஆப்பிரிக்கா, கொலம்பியா, இங்கிலாந்து, ஹாங்காங் அணிகள் பங்கேற்கவுள்ளன.
இந்த போட்டி செப்டம்பர் 30-ம் தேதி முதல் அ்க்டோபர் 10-ம் தேதி வரை லண்டனில் நடைபெறவுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் அணிக்கு டாக்டர் அச்சுதா சமந்தா வாழ்த்துக் கூறி வழியனுப்பிவைத்துள்ளார்.
அணியினருடன் பயிற்சியாளர் ராஜ்கிஷோர் முர்மு, மேலாளர் ருத்ரகேஷ் ஜேனா உள்ளி்டடோர் சென்றுள்ளனர்.