சென்னை: மாதிரி ஐ.நா. சபை கூட்டத்தை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள கேஐஐடி பல்கலைக்கழகம்(கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி) நடத்தவுள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய கூட்டம்
ஆசியாவிலேலேயே மிகப்பெரிய அளவிலான மாதிரி ஐ.நா. சபை கூட்டமாகும் இது. கடந்த 2 ஆண்டுகளாக இதுபோன்ற கூட்டத்தை வெற்றிகரகமாக நடத்தியுள்ளது இந்த பல்கலைக்கழகம்.
அச்சுதா சமந்தா
இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் அச்சுதா சமந்தா செய்துள்ளார்.
அக்டோபர் 30 முதல்...
இந்த ஆண்டுக்கான கூட்டம் வரும் அக்டோபர் 30-ம் தேதி தொடங்கி நவம்பர் 1-ம் தேதி வரை நடைபெறும்.
2 ஆயிரம் பிரதிநிதிகள்....
நாடு முழுவதிலுமிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இத்தாலி, நெதர்லாந்து, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க வருகை தரவுள்ளனர்.
உலகத் தலைவர்கள்....
உலகத் தலைவர்கள், உலக விஷயங்கள் குறித்து இந்த ஐ.நா. சபை கூட்டத்தில் விவாதங்கள் நடத்தப்படும். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பல்வேறு தலைவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைக்கும்.
ஒப்பந்தம்....
பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டது போல இந்த மாதிரி ஐ.நா. சபை இங்கும் நடத்தப்படும். பாரீஸ், ரோம், தி ஹேக், ஆசியா பசுபிக், மாஸ்கோ, பால்கன், சிங்கப்பூர் மாதிரி ஐ.நா. சபை அமைப்புகளுடன் இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.