சென்னை: கேரள பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படிப்புக்கான சேர்க்கைத் தொடங்கியுள்ளது.
திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தில் முழு நேர பிஎச்.டி படிப்பு, பகுதி நேர பிஎச்.டி படிப்பு பயில நடப்பு கல்வியாண்டுக்காக சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த படிப்பு பயில விரும்பும் மாணவ, மாணவிகள் பட்டமேல்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
பட்டமேல்படிப்பு தேர்வெழுதி ரிசல்ட்டுக்காகக் காத்திருப்பவர்களும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். படிப்பு பயில விரும்பும் மாணவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதைத் தொடர்ந்து நுழைவுத் தேர்வு வைக்கப்படும். தேர்வின் அடிப்படையில் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.
ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதிக்குள் இந்தப் படிப்பு பயில விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.keralauniversity.ac.in-ல் தொடர்புகொள்ளலாம்.