சென்னை: நாட்டிலேயே முதன்முறையாக கேரள மாநிலத்தில் பாலினம் தொடர்பான பல்கலைக்கழகம் அமையவுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த பலைக்கழகம் அமையவுள்ளது. பாலினப் பூங்கா வளாகத்தில் இந்த சுயாட்சி பல்கலைக்கழகம் அமையவுள்ளது. மாநிலத்தின் சமூக நீதித்துறையின் கீழ் இந்த பல்கலைக்கழகம் செயல்படும்.
இதுதொடர்பாக பாலினப் பூங்கா தலைமைச் செயல் அதிகாரி பி.டி.எம். சுனிஷ் கூறியதாவது:
பாலினப் பூங்காவிலுள்ள தெற்காசிய ஆராய்ச்சி மையம், இனி பாலின பல்கலைக்கழகமாக செயல்படும். அடுத்த ஆண்டுக்குள் இது முழு பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்படும். நாட்டிலேயே இதுபோன்ற பல்கலைக்கழகம் முதன்முறையாக இங்கு அமைக்கப்படுகிறது. தொழில்துறை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் கேரள அரசு முக்கியத்தும் செலுத்தி வருகிறது. அதன் காரணமாகவே இந்த பல்கலைக்கழகத்தை அமைக்கிறது.
அதைத் தொடர்ந்து தற்போது பாலினப் பல்கலைக்கழகம். பாலினப் பூங்கா அமைக்கப்பட்டதன் மூலம் பாலினம் தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தோம். தற்போது பல்கலைக்கழகம் அமைப்பதன் மூலம் மேலும் பல பிரச்னைகள் தீர்க்கப்படும்.
இதற்காக லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் உயர்கல்வி நிறுவனத்துடன் கைகோக்கவுள்ளோம். அதுமட்டுமல்லாமல் பாலினம் தொடர்பாக உலகில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளோம் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications












