சென்னை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி23, 24-ம் தேதி நடைபெறும் வாக்-இன்-இன்டர்வியூவில் பங்கேற்கலாம்.
சத்தீஸ்கர் மாநிலம் மஹசமுந்த் பகுதியில் இந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைந்துள்ளது. இங்கு பல்வேறு ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இவையனைத்தும் பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களாகும். ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல், வணிகவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்கள் இங்கு பணியமர்த்தப்படவுள்ளனர்.
இந்தப் பணியிடங்களில் 18 முதல் 65 வயதுக்குள்பட்டவர்கள் சேர முடியும்.
இந்தப் பணியிடங்களில் சேர விருப்பமுள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் வரும் 23, 24-ம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகவே பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு www.kvmahasamund.com என்ற இணையதள முகவரியைக் காணலாம்.