சென்னை: கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்க பிப்ரவரி 2-ம் தேதிக்குள் விண்ணபு்பம் செய்யலாம்.
ஆந்த்ரோபாலஜி பிரிவில் ஒரு பணியிடமும், பயோடெக்னாலஜி அண்ட் மைக்ரோபயலாஜி பிரிவில் ஒரு பணியிடமும், ஆங்கிலத் துறையில் ஒரு பணியிடமும் காலியாகவுள்ளன.
யுஜிசி விதிகளின்படி பேராசிரியர் நியமனம் இருக்கும். வயது வரம்பும் யுஜிசி விதிகளின்படி இருக்கும். விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் the Registrar, Kannur University, Thavakkara, Civil Station (P.O), Kannur-2, Pin-670002 என்ற முகவரிக்கு பிப்ரவரி 2-ம் தேதிக்குள் இருக்கும்.
விண்ணப்பக் கட்டணமாக பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000 வசூலிக்கப்படும். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு ரூ.500 வசூலிக்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு கண்ணூர் பல்கலைக்கழகத்தின் இணையதளமான http://www.kannuruniversity.ac.in-ல் தொடர்புகொள்ளலாம்.