தமிழகத்தில் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்க அரசு முடிவெடுத்துள்ளது . தமிழகத்தில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கி வந்தது . மாணவர்களுக்கு தமிழக அரசு உதவிதொகை வழங்கியது .
ரேங்கிங் முறை இரத்து செய்யப்பட்டதால் இந்த உதவித்திட்டம் வழங்கப்படுவது
நிறுத்த்ப்பட்டது. ரேங்கிங் முறை இரத்து செய்யப்பட்டதால் புதிய முறையாக அரசு சிந்தித்து வந்தது . இது தொடர்பாக அரசு அதிக மதிபெண்கள் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்க முடிவெடுத்துள்ளது .
காமராஜர் விருதுக்காக மாணவர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது . மாணவர்கள் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கும் விழாவுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று பொது தேர்வில் அதிக மதிபெண் பெறும் மாணவர்கள் தனித்திறன் போட்டிகள் அறிவியல் கண்காட்சி, நாட்டு நலப்பணித்திட்டம், சாரண சாரணியர் இயக்கம், செஞ்சிலுவை சங்க நடவடிக்கைகள் அனைத்தும் மாணவர்களின் நடவடிக்கை மதிப்பீட்டில் இணைக்க அரசு முடிவெடுத்துள்ளது விருதுக்கான தனிமதிப்பீட்டில் இணைக்கப்படும் .
மாணவர்களுக்கு வழங்கப்படும் காமராஜர் விருதானது சிறப்பு வாய்ந்த அரசு நடவடிக்கைகளில் ஒன்றென கருதப்படுகிறது . மாணவர்களுக்கு கல்வி கண் திறந்த காமராஜர் சிறப்பு அனைத்தும் அறிவார்கள் என்பதால் காமராஜர்க்கும் நாம் பெருமிதம் சேர்க்கும் ஒரு நடவடிக்கையாக கருதலாம் அத்துடன் மாணவர்களின் பொறுப்புணர்வு அதிகரிக்கும்.
சார்ந்த பதிவுகள் :
பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டங்கள் அறிமுகம்