சென்னை: விரைவில் அமைக்கப்படவுள்ள பழங்குடியின பல்கலைக்கழகத்துக்கு ரூ.1 கோடி மட்டுமே பொது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
ஆந்திரி மாநிலம் விழிநகரம் மாவட்டத்திலுள்ள ரெல்லியில் பழங்குடியின பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது.

இந்த பல்கலைக்கழகத்துக்கு 2016-17-ம் நிதியாண்டு பொது பட்ஜெட்டில் ரூ.1 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவான நிதியாகும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் ஐஐஎம் உயர்கல்வி நிறுவனத்துக்கு ரூ.30 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஐஐஎம் -முக்கு கூடுதல் நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைவான நிதி ஒதுக்கப்பட்டதால் ஐஐஎம் மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தற்போது விசாகப்பட்டினம் ஐஐஎம், ஆந்திரப் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
கம்பீரம் பகுதியில் 300 ஏக்கர் ஐஐஎம் உயர்கல்வி நிறுவனத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் போதிய நிதி இல்லாததால் அங்கு கட்டடம் கட்டப்படாமல் உள்ளது.


Click it and Unblock the Notifications












