புதுடெல்லி: பெங்களூரிலுள்ள ஜவஹர்லால் நேரு சென்டர் ஃபார் அட்வான்ஸ்டு சயின்டிபிக் ரிசர்ச் (ஜேஎன்சிஏஎஸ்ஆர்) இன்ஸ்டிடியூட்டில் பிஎச்.டி, எம்.எஸ். படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2016-ம் ஆண்டுக்கான படிப்புகளாகும் இது. எம்.எஸ். படிப்பு படிக்க விரும்புவோர் எம்.எஸ்சி, பி.இ., பி.டெக், பி.பார்ம், எம்.இ., எம்.டெக்., அல்லது எம்பிபிஎஸ் படித்திருக்கவேண்டும்.
மேலும் கேட், ஜிபிஏடி, யுஜிசி, சிஎஸ்ஐஆர்-என்இடி-ஜேஆர்எஃப், ஜேசிஎம்ஆர், ஜேஆர்எஃப் டிபிடி, ஜேஆர்எப், ஜேஇஎஸ்டி, இன்ஸ்பையர் ஆகிய தேர்வுகளில் ஏதாவது ஒன்றில் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.
பிஎச்.டி. படிப்பு படிக்க விரும்புவோர் எம்.எஸ்., பி.இ., பி.டெக்., பி.ஃபார்ம், எம்.இ., எம்.டெக், எம்பிபிஎஸ் இவற்றில் ஏதாவது ஒரு பட்டத்தைப் பெற்றிருக்கவேண்டும்.
மேலும் கேட் உள்ளிட்ட தேர்வுகளில் ஏதாவது ஒன்றில் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.
இந்தப் படிப்பில் சேர விரும்புவோர் ஜேஎன்சிஏஎஸ்ஆர் நடத்தும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெறவேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஆன்-லைனில் அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு http://www.jncasr.ac.in/admit/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.